follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுபொது நிர்வாக செயலாளர் பற்றிய அரசின் தீர்மானம்

பொது நிர்வாக செயலாளர் பற்றிய அரசின் தீர்மானம்

Published on

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், இலங்கையில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடமிருந்து பாதுகாப்பு வைப்புத்தொகையை ஏற்க வேண்டாம் என அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பின்னர் குறித்த கடிதத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அழைப்பின் பேரில் கடந்த 13ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக அங்கு வந்த பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கருத்து தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன.

“அதே நாளில் கடிதம் வெளியிட்டு உத்தரவை மீளப் பெற்றுள்ளார். அதற்கு சட்ட பலன் இல்லை. அமைச்சர்களின் செயலாளர்களால் இதற்கு முன்பும் இதுபோன்ற தவறுகள் நடந்துள்ளன. எனவே பாரபட்சமான முடிவு இல்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழி இல்லை என நினைக்கிறேன்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...