follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுதேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை

Published on

தேர்தல் அல்லது தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை எனவும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்திகளை கையாளுமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எனது கருத்துப்படி, தேர்தலை ஒத்திவைக்கும் தந்திரோபாயங்களைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ஒருபோதும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் கோரவில்லை. தேர்தல் நடந்தால் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று தனது கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொருந்தாது. இது ஜனாதிபதியை நியமிப்பதற்கோ நீக்குவதற்கோ நடத்தப்படும் தேர்தல் அல்ல. பாராளுமன்ற தேர்தல் அல்ல. எனவே ஜனாதிபதியோ, பாராளுமன்றமோ மாறாத அந்த மாகாணத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தல்தான் உள்ளூராட்சித் தேர்தல் எனத் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...