follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகள்

அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகள்

Published on

காலிக்கும் மகும்புரவிற்கும் இடையில் இயங்கும் நெடுஞ்சாலை பஸ்களில் பயணிப்பதற்கு இன்று (02) முதல் முற்கொடுப்பனவு அட்டைகள் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

கொட்டாவ, மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் இதனை நாடளாவிய ரீதியில் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அட்டைகளை மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் நேற்று (பெப்.1) அரச வங்கிகளுடன் இந்த அட்டைகளை வழங்குவது தொடர்பில் உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முற்கொடுப்பனவு அட்டையை பொது மக்கள் அரச வங்கிகள் ஊடாக பெற்றுக்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதற்கட்டமாக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பேருந்துகளுக்கு இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னர் ரயில் சேவையிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...