follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP1"எந்த அரசாங்கத்தையும் மண்டியிடும் அதிகாரத்தை உருவாக்குவோம்"

“எந்த அரசாங்கத்தையும் மண்டியிடும் அதிகாரத்தை உருவாக்குவோம்”

Published on

எந்தவொரு அரசாங்கமும் முழந்தாளிடும் ஒரு சக்தியினை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“என்னை விடுவிக்க திட்டமிட்டு இருக்கவில்லை, முடிந்தால் என்னைக் கொன்றுவிடலாம் என்பது தான் இவர்களது திட்டம். அடக்குமுறைக்கு மக்கள் அடிபணியாததால் எங்களை விடுவிக்க வேண்டியதாயிற்று. பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு என்னை மறைத்து வைத்தார்கள்.. மறுநாள் காலை துணியால் சுற்றப்பட்டு எடேரமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அந்த பொலிஸ் நிலையம் யாருமில்லாது வெறிச்சோடி இருந்தது.. விஜேவீரவுக்கு என்ன நடந்தது என்று உனக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டனர். கொலை செய்வதாக மிரட்டினர். தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைத்து வதைத்தனர். உளரீதியாகவும் வதைத்தனர்.

அதன்பிறகு, வாகனத்தில் ஏற்றி கடற்கரை ஓரத்தில் உள்ள பொலிஸ் விடுதிக்கு அழைத்துச் சென்று, தரைத்தளத்தில் உள்ள அறையில், மணிக்கணக்கில் துணியால் சுற்றப்பட்டு வைத்திருந்தனர்.

“உங்கள் கடைசி உணவை சாப்பிட வேண்டுமா என்று கேட்டனர்.”

“இன்னொரு நாள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நவகமுவ கோவில் வளாகத்திற்கு கீழக்கரையில் ஒரு வெறிச்சோடிய பக்கம் கொண்டுபோய், தொலைபேசியில் யாரிடமோ ‘சார், சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்துட்டோம்..என்ன பண்ணணும்’ என்று கேட்டனர்.”

“அப்போது நவகமுவ கோயிலுக்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி வந்து கொண்டிருக்க, இன்னொருவன் அதிகாரியிடம் வருவதாக கூற அந்த பாதுகாப்பு அதிகாரியை தடுக்கச் சொன்னார்.”

“மதுஷை எப்படி கொன்றார்கள் என்று சொன்னார்கள். என்னை கொல்ல திட்டமிட்டார்கள்.”

“என்னை விசாரணை செய்ய அழைத்துச் சென்றார்களா? பொலிசார் இதற்கு உறுதியான பதிலைச் சொல்ல வேண்டும். இது திட்டமிடப்பட்ட ஒன்று.”

அதன் பின்னர் தான் நான் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டேன்.

“நாங்கள் இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​ஒரு பெரிய பொலிஸ் குழுவே எங்களைப் பாதுகாத்தது. அதனால்தான் நான் இன்று விடுவிக்கப்பட்டேன்.”

ஆனால் அடக்குமுறை இன்னும் நிற்கவில்லை.பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஒரு கொடூரமான செயல்.

“விடுவிக்கப்பட்டதால் மட்டும் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. போராட்டம் தொடர்கிறது.”

“அவர்கள் பயங்கரவாதத்தை விதைத்து எங்களை முத்திரை குத்துகிறார்கள்.”

“எப்படி ஆட்சி அமைத்தாலும் எங்கள் பிரச்சினை ஒன்றுதான். அப்படி இல்லை என்று சொன்னால் திரும்பிப் பாருங்கள்.”

“எங்கள் உண்மையான உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுகிறோம். எந்த அரசாங்கத்தையும் மண்டியிடும் சக்தி இந்த நாட்டிற்குத் தேவை. அதற்காக நாம் தலையிடுவோம்.”

“மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏற்கனவே ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட அதிகாரிகள் மீது தனிப்பட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”

“4ஆம் திகதி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளோம், 4ஆம் திகதி கொழும்புக்கு வந்து எமது சுதந்திரத்தை வென்றெடுப்போம். கொழும்புக்கு வர முடியாதவர்கள் அருகில் உள்ள சந்தியில் கறுப்புக்கொடியை கொண்டு வாருங்கள்.”

“நாங்கள் 4:7 அடி இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டோம். இருட்டாக இருந்தது. சூரிய வெளிச்சம் வரவில்லை. மலசலகூட ஹேண்ட் ஷவரில் தான் குளித்தோம்.. சாப்பாடு தரையில் இரும்புத் தட்டில் வைத்து சாப்பிட்டோம். எங்களை நோயுறச் செய்ய அவர்கள் அதைச் செய்தார்கள். நாங்கள் மிகவும் தாமதமாக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டோம்.”

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...