follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமாகாண சபை அதிகாரப் பகிர்வு என்பது ரணிலின் அரசியல் வியூகம்

மாகாண சபை அதிகாரப் பகிர்வு என்பது ரணிலின் அரசியல் வியூகம்

Published on

தூக்கில் தொங்குவதற்கு கயிறு இல்லாமல் அரசியல் ரீதியாக ஆதரவற்ற நிலையில் இருந்த விமல் வீரவன்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கில் தொங்குவதற்கு கயிற்றை வழங்கியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஒருபோதும் நிறைவேற்ற முடியாத மாகாண சபை அதிகாரப் பகிர்வு குறித்த தலைப்பை முன்வைக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சியின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபை முறைமையை ஒருபோதும் முழுமையாக அமுல்படுத்த மாட்டார் எனவும் அதற்குப் பதிலாக சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி அரசியல் ரீதியாக தனது அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்ளும் வியூக அரசியல் நடைமுறையை கையாண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தற்போதுள்ள மாகாணசபை முறைமைக்கு பதிலாக புதிய அதிகாரப் பகிர்வு வேலைத்திட்டம் தொடர்பில் தமது கட்சியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளமொன்ருக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...