follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1இலங்கையில் இருந்து முதல் முறையாக சந்தைக்கு மோட்டார் கார்

இலங்கையில் இருந்து முதல் முறையாக சந்தைக்கு மோட்டார் கார்

Published on

இலங்கையில் முதன் முறையாக அசெம்பிள் செய்யப்பட்ட Hyundai Grand i10, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சிட்டி சென்டரில் இன்று (10) முதல் முறையாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ நிறுவனம் மற்றும் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இணைந்து சீதுவயில் உள்ள அதிநவீன தொழிற்சாலையில் இந்த காரின் அசெம்பிளிங் செய்யப்படுகிறது.

வாகனங்களை ஒன்று சேர்ப்பது மற்றும் வாகன உதிரிபாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் துறையில் இந்த நிகழ்வு ஒரு பாரிய படியாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த காரை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், முதலீட்டு சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, அபான்ஸ் குழும நிறுவனங்களின் பணிப்பாளர்கள் சரோஷி துபாஷ் மற்றும் ருசி பெஸ்டோன்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...