follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு"கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை"

“கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை”

Published on

காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் வெளியிடப்பட்டுள்ள கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பொத்துஹெரவில் உள்ள நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த கஞ்சா கலந்த சொக்லேட்டில் அஸ்வகந்தா, வெல்மீ மற்றும் லுன்வில உள்ளிட்டவை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வகை சொக்லேட்டை சந்தைக்கு வெளியிடுவதற்கு அனுமதி கோரி உற்பத்தியாளர் ஆயுர்வேத திணைக்களத்திடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“இது விஷம், ஓபியம் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட தயாரிப்பு ஆகும், மேலும் நாட்டில் கஞ்சாவைப் பயன்படுத்துவது மருந்துகளைத் தயாரிப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த தயாரிப்புக்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, மட்டுப்படுத்தப்பட்ட பகுதியை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சொக்லேட் தயாரித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.தனஞ்சய வீரசூரிய தெரிவித்துள்ளார்.

ஆய்வக மற்றும் மருத்துவ ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும், மூன்றாம் கட்ட பொதுமக்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன்போது சுமார் 1,000 சாக்லேட்டுகளின் மொத்த கையிருப்பும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...