follow the truth

follow the truth

May, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசிபெட்கோ கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியது

சிபெட்கோ கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியது

Published on

எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக விநியோகஸ்தர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு முதல் இந்தக் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் கூறுகிறது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக பணம் செலுத்திய விநியோகஸ்தர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எண்ணெய் கூட்டுத்தாபனத்துடனும், மக்கள் வங்கியுடனும் கலந்துரையாடி தீர்வினை பெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மக்கள் வங்கியின் கணக்கில் பணத்தை வைப்பிலிடும் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விடுவிக்கப்படாது என எண்ணெய் கூட்டுத்தாபனம் சில பகுதிகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...