follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுஹம்பாந்தோட்டை மேயர் பொதுஜன பெரமுனவில் இருந்து இடைநீக்கம்

ஹம்பாந்தோட்டை மேயர் பொதுஜன பெரமுனவில் இருந்து இடைநீக்கம்

Published on

ஹம்பாந்தோட்டை மேயர் காமினி ஸ்ரீ ஆனந்தாவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துமாறும், ஹம்பாந்தோட்டை மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரை நீக்குமாறும், மேயர் பதவியிலிருந்தும் நீக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளது.

மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹம்பாந்தோட்டை நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவொன்றில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்திருந்தமையினால் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகத்திடமிருந்து தாம் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக கடிதம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டமை உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படும் வரை அந்த பதவியில் நீடிப்பதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு அவர் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேயர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவுக்குப் பின் அவர் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...