follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுசரணவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

சரணவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Published on

தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும் போது, ​​தேசிய லொத்தர் சபையின் மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் பின்னர் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சரண குணவர்தனவை 30,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த உத்தரவிட்டார்.

அதன் பின்னர், வழக்கு விசாரணைக்காக மார்ச் 23ஆம் திகதிக்கு அழைக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 2007 ஜூலை 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபையின் மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 3,510,000 ரூபா நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...

கொத்மலையில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்து ஆய்வுக்கு

கொத்மலையில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத்...