follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கு நிவாரணம் வழங்குவதில் சவூதி உள்ளிட்ட நாடுகள் கவனம்

இலங்கைக்கு நிவாரணம் வழங்குவதில் சவூதி உள்ளிட்ட நாடுகள் கவனம்

Published on

உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் உச்சி மாநாடு இன்று (22) ஆரம்பமாகிறது.

தற்போது ஜி 20 குழுவின் தலைவராக இந்தியா உள்ளது, அதன் உச்சி மாநாடு பெங்களூரில் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இந்த மாநாட்டில் பரிசீலிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளபடி, இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் தடையாக உள்ள விடயங்கள் இந்த சந்திப்பில் பரிசீலிக்கப்படவுள்ளதுடன், சீனா உள்ளிட்ட நாட்டின் கடன் வழங்கும் நாடுகளும் இந்த சந்திப்பில் இணையவுள்ளன.

மாநாட்டுடன், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இந்தியா, சீனா, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான ஜி7 நாடுகளின் ஆன்லைன் சந்திப்பும் நடைபெறவுள்ளது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடன் மறுசீரமைப்புக்கான பொதுவான தரநிலைகள் குறித்த உடன்பாட்டை எட்டுவதற்கு இது திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...