follow the truth

follow the truth

May, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅநுரவின் கூற்றுப்படி, சஜித்தின் சகோதரி துலாங்சலி போலி நாணயத்தாள்களை அச்சிட்டாரா?

அநுரவின் கூற்றுப்படி, சஜித்தின் சகோதரி துலாங்சலி போலி நாணயத்தாள்களை அச்சிட்டாரா?

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலாங்சலி பிரேமதாச தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் செயலாளர் நாயகம் கனிஷ்க லெனரோல் பதிலளித்துள்ளார்.

துலாங்சலி பிரேமதாச எவ்வாறு போலி நாணயத்தை அச்சிட்டு தப்பிச் சென்றார் என்பது தொடர்பில் எவரும் நேர்மையாகப் பேசுவதில்லை என அனுர குமார திஸாநாயக்கவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த கனிஷ்க லெனரோல், திருமதி பிரேமதாச 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வர்த்தகர் ஒருவர் வழங்கிய பணத்தில் போலி பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பொலிஸாரின் விசாரணையின் பின்னர் பெரேரா என்ற வர்த்தகர் குற்றவாளி எனவும், துலாங்சலி பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த வர்த்தகர் 20 இலட்சம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இதன்படி, அனுர குமார திஸாநாயக்க நீதிமன்றினை அவமதித்து துலாங்சலி பிரேமதாச மீது பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் என்றும் கனிஷ்க லெனரோல் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...