follow the truth

follow the truth

May, 18, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஅநுரவின் கூற்றுப்படி, சஜித்தின் சகோதரி துலாங்சலி போலி நாணயத்தாள்களை அச்சிட்டாரா?

அநுரவின் கூற்றுப்படி, சஜித்தின் சகோதரி துலாங்சலி போலி நாணயத்தாள்களை அச்சிட்டாரா?

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலாங்சலி பிரேமதாச தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் செயலாளர் நாயகம் கனிஷ்க லெனரோல் பதிலளித்துள்ளார்.

துலாங்சலி பிரேமதாச எவ்வாறு போலி நாணயத்தை அச்சிட்டு தப்பிச் சென்றார் என்பது தொடர்பில் எவரும் நேர்மையாகப் பேசுவதில்லை என அனுர குமார திஸாநாயக்கவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த கனிஷ்க லெனரோல், திருமதி பிரேமதாச 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வர்த்தகர் ஒருவர் வழங்கிய பணத்தில் போலி பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பொலிஸாரின் விசாரணையின் பின்னர் பெரேரா என்ற வர்த்தகர் குற்றவாளி எனவும், துலாங்சலி பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த வர்த்தகர் 20 இலட்சம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இதன்படி, அனுர குமார திஸாநாயக்க நீதிமன்றினை அவமதித்து துலாங்சலி பிரேமதாச மீது பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் என்றும் கனிஷ்க லெனரோல் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...

புதிய அரசியல் கூட்டணியில் 15 SJP எம்பிக்கள்

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகளை நிறைவுக்கு...