follow the truth

follow the truth

July, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஎல்லைகளைக் கடந்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய - பாகிஸ்தான் காதல்

எல்லைகளைக் கடந்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய – பாகிஸ்தான் காதல்

Published on

இன்று சர்வதேச ஊடகங்கள் சிறையில் முடிந்த இந்திய-பாகிஸ்தான் காதல் கதைக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

கடந்த மாதம், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் சிறுமி இந்தியாவுக்கு வர உதவியதாகக் கூறி இந்தியர் ஒருவர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவரது காதலி தான் இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து வந்ததாக தகவல் வெளியானது.

இந்திய நாட்டவர் முலயாம் சிங் யதாவுக்கு 21 வயது. யுவதி 19 வயதான இக்ரா ஜீவனி.

இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இணையம் மூலம் ஒருவரையொருவர் அறிந்துள்ளனர்.

கொவிட் காரணமாக நாடுகள் மூடப்பட்டபோது 2020 இல் அவர்களின் உறவு தொடங்கியது.

முலாயம் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார், இக்ரா ஒரு மாணவர்.

இருவரும் இணையத்தில் தற்செயலாக சந்தித்தனர், அன்றிலிருந்து தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்து வந்தனர்.

பின்னர் அது காதலாக மாறியது, அங்கு அவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்தும் விவாதித்தனர்.

தாங்கள் சேர்வது கடினம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் நிரந்தர எதிரிகள்.

கடந்த செப்டம்பரில் இருவரும் ஒரு முடிவை எடுத்தனர். நேபாளம் சென்று திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.

பின்னர் இருவரும் இந்தியா வந்து பெங்களூருவில் வசித்து வந்தனர்.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம், பொலிசார் வந்து இருவரையும் கைது செய்தனர், கடந்த வாரம் சிறுமி பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார், முலயாம் சிங்கிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் முலயாமின் உறவினர்கள், இரு நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், முலயாமும் இக்ராவும் காதலர்கள் என்று கூறுகிறார்கள்.

தங்கள் காதலுக்கு இடையூறு விளைவிப்பதும், கெடுப்பதும் குற்றம் என்கிறார்கள்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இருவருக்கும் நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...