follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP1உள்ளூராட்சி மன்ற தேர்தல் உத்தியோகபூர்வமாக ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் உத்தியோகபூர்வமாக ஒத்திவைப்பு

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24) காலை கூடி தீர்மானித்துள்ளது.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் காரணமாக, மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அன்றைய தினம் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தீர்மானித்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா அதன் உறுப்பினர்களான எஸ்.பி. திவரத்ன, எம். எம். முகமது மற்றும் கே. பி. பி. பத்திரன ஆகியோர் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...