follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுசந்தேக நபர் தப்பிச் சென்றமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கைது

சந்தேக நபர் தப்பிச் சென்றமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கைது

Published on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில் சார்ஜன்ட் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (25) கைது செய்யப்பட்டிருந்தனர்.

போலியான பெயரில் டுபாய்க்கு செல்ல முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த நபர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இந்த சந்தேக நபர் கொலைகள் உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதால், வெளிநாடு செல்ல பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ‘iPhone’ சமாச்சாரம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவு அறிக்கைகள் மற்றும் இரகசியத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், இதன் காரணமாக, புதிய...