follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுகச்சதீவு பெருவிழா இன்றும் நாளையும்

கச்சதீவு பெருவிழா இன்றும் நாளையும்

Published on

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இரு நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இன்றும் (03) நாளையும் (04) நடைபெறவுள்ளது.

யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் கச்சத்தீவு மகா மாங்கல்யத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு திருவிழாவிற்கு சுமார் 1,000 இந்திய பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்காக போக்குவரத்து, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான இன்றைய இரவு உணவு, நாளைய காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்விழாவில் பங்குபற்றும் இலங்கை பக்தர்களுக்காக யாழ்ப்பாணம் குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து இன்று கடற்படை படகு சேவையை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...