follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுதேர்தல் திகதி அறிவிப்பு ஒத்திவைப்பு

தேர்தல் திகதி அறிவிப்பு ஒத்திவைப்பு [UPDATE]

Published on

தேர்தல் திகதி அறிவிப்பு அடுத்த வாரம் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது.

ஆனால், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, திகதி நிர்ணயம் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், ஊடக செயலாளர் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அடுத்த வாரம் முதல் சில நாட்களில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அதன் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் நிமல் ஜீ. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டம் மூலம் 2023 தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து, நிதி அமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுங்க மோசடி விவகாரம் – விமல் வீரவன்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க...

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள்...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (09) பல தடவைகள்...