follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉலகம்ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ

Published on

பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

சுமார் 2000 வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி சுமார் 12,000 ரோஹிங்கியா அகதிகள் வீடுகளை இழந்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், சுமார் 100 குடும்பங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் கூட்டு நடவடிக்கை மூலம் தீ அணைக்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வீடுகளுக்கு மேலதிகமாக, 35 முஸ்லிம் தேவாலயங்கள் மற்றும் அகதிகளுக்கான 21 கற்றல் நிலையங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹...

2027 முதல் சொத்து வரி அறிமுகம் – சர்வதேச நாணய நிதியம் தகவல்

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த...