follow the truth

follow the truth

May, 6, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"நான் அரசாங்கத்திற்கு செல்லமாட்டேன்.." - ராஜித

“நான் அரசாங்கத்திற்கு செல்லமாட்டேன்..” – ராஜித

Published on

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது தாம் முதலில் விருப்பத்தை வெளிப்படுத்திய போதிலும், அரசாங்கத்தில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் வினவியபோது, ​​அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“..முன்னதாக, அரசாங்கம் தேசிய அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிட்டபோது, ​​கோரிக்கைகள் இருந்தன. அவர்கள் (அரசு) நாட்டின் நலனுக்காக நான் ஒரு சவாலை ஏற்கத் தயாரா என்று கேட்டதற்கு, நான் ஆம் என்று சொன்னேன். ஆனால் தற்சமயம் அதுபோன்ற திட்டங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை என்று நினைக்கிறேன்..”

அரசாங்கத்தில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கும் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை” என்றார்.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சுகாதார அமைச்சுப் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...