follow the truth

follow the truth

May, 7, 2025
HomeTOP1ரோஹிதவின் சம்பத் வங்கி கிரெடிட் கார்டில் இருந்து $400 திருட்டு

ரோஹிதவின் சம்பத் வங்கி கிரெடிட் கார்டில் இருந்து $400 திருட்டு

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் (சிச்சி) கடனட்டையிலிருந்து சுமார் 400 டொலர்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் நேற்று (09) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அறிவித்துள்ளனர்.

முறைப்பாட்டாளரின் கிரெடிட் கார்டில் இருந்து நான்கு தடவைகளில் ஆன்லைன் பரிமாற்றம் மூலம் 387 டொலர்கள் அதாவது ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா இலங்கை நாணயம் திருடப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இல. 117, விஜேராம மாவத்தை, கொழும்பு 07 இல் வசிக்கும் ரோஹித சந்தன ராஜபக்ஷ என்பவரால் நாரஹேன்பிட்டி பொலிஸில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் கடந்த 3ஆம் திகதி கோட்டே, 184 தூவ வீதியில் உள்ள தனது வீட்டை விட்டு மாத்தறை வீட்டிற்குச் சென்றதாகவும், அதற்குள் சம்பத் வங்கியின் கடன் அட்டை விழுந்துள்ளதாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இது இலங்கை குற்றவியல் சட்டத்தின் 386வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பொலிஸார், சம்பத் வங்கியின் தலைமையக முகாமையாளருக்கு உரிய வங்கிக் கணக்கு பதிவேடுகளை வரவழைக்குமாறு உத்தரவிடுமாறும் கோரியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக வங்கித் தலைவர் ஒருவர் 20 வருடங்களுக்கு பிறகு இலங்கை வருகிறார்

உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா இன்று இலங்கைக்கு வருகை தர உள்ளார். இதனை உலக வங்கி ஒரு அறிக்கை...

சஜித் தனது முகநூல் கணக்கில் அட்டகாசமான படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் (PHOTO)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில்...

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது, இன்று சிஸ்தீன் தேவாலயத்தில்...