follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்

Published on

சிறந்த உலகை உருவாக்க இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இணைந்து செயல்படும் என்று அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு ஐதராபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியையும் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பார்வையிட்டார்.

போட்டியை பார்த்துவிட்டு அவுஸ்திரேலியா பிரதமர் டுவிட்டரில் கூறியதாவது:

‘கிரிக்கெட் களத்தில் உலகின் தலைசிறந்த வீரர்களாக ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் போட்டியிடுகின்றன. சிறந்த உலகை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும்..’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டரில், ‘நல்ல நண்பருடன் கிரிக்கெட் போட்டியைக் காணும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...