follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1IMF நிவாரணத்திற்கு மேலதிகமாக உலக வங்கியிடமிருந்தும் நிதி

IMF நிவாரணத்திற்கு மேலதிகமாக உலக வங்கியிடமிருந்தும் நிதி

Published on

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணத்தைப் பெறுவதற்கு மேலதிகமாக, உலக வங்கி 500 முதல் 1500 மில்லியன் டொலர் வரையிலான தொகையை இலங்கைக்கு வழங்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஆசிய அபிவிருத்தி வங்கியும் சுமார் பத்து இலட்சத்து அறுநூறு டொலர்களை வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

நான்கு வருடங்களில் 8 தடவைகளில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை இலங்கை பெறும் என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

“இந்த மாத இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்புகிறோம். பின்னர் அதே நேரத்தில் நாம் சுமார் பத்து இலட்சம் முந்நூற்று ஐம்பது மில்லியன் டாலர்களைப் பெற வேண்டும். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த உத்தரவாதத்தை நாங்கள் எதிர்பார்த்தோம்..” அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...