follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுபுதிய நேரத்துடன் ரயில் சேவைகள்

புதிய நேரத்துடன் ரயில் சேவைகள்

Published on

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் விசேட நேர அட்டவணைக்கு அமைவாகவே ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான திகதி இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய ரயில் சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பொதுப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து, அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோரின் தலைமையில், நேற்று (11) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர் இதனை கூறினார்.

மேலும், விசேட நேர அட்டவணைக்கு அமைவாக, 130 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. நெருக்கடியின்றி பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு புதிதாக பல கடுகதி ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ரயில்வே பொது முகாமையாளர் கூறினார்.

அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையின் 3300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளதாகவும், ரயில் பயணிகளின் வசதி கருதி விசேட பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை, போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. எனவே, போக்குவரத்து சேவைகளை தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...