follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் நெருக்கடி

பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் நெருக்கடி

Published on

பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் நெருக்கடியை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்று அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

பாகிஸ்தானின் 24 முக்கிய நகரங்களில் வசிக்கும் சுமார் 80 சதவீத மக்களுக்கு சுத்தமான தண்ணீரை உட்கொள்ளும் வாய்ப்பு இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

கராச்சியில் வசிக்கும் 16 மில்லியன் மக்கள் ஓடும் நீரைப் பருக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எதிர்கொள்ளும் இந்த கடுமையான தண்ணீர் நெருக்கடிக்கு முக்கிய காரணம் அந்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் தண்ணீருக்கான தேவை அதிகரிப்பு.

தோல்வியடைந்த ஆட்சியின் காரணமாக நீண்டகாலமாக நிலவும் பழைய மற்றும் பலவீனமான உட்கட்டமைப்புகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத நீர் குழாய் அமைப்புகளினால் தற்போதுள்ள நீர் ஆதாரங்கள் வீணாகி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறைந்த அளவிலான நீர் சேமிப்பு மற்றும் தேக்கி வைக்கும் வசதிகள் இல்லாமையால் பாகிஸ்தானில் தண்ணீர் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...