follow the truth

follow the truth

July, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரச ஊழியர் சம்பளம் இருபதாயிரம் வரை அதிகரிப்பு..

அரச ஊழியர் சம்பளம் இருபதாயிரம் வரை அதிகரிப்பு..

Published on

அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த கால பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமல் உள்ளது.

எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதனூடாக மக்களின் வருவாயை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

இந்நிலையில் நாட்டு மக்களின் வருவாயை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...

சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள்...