follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பிரதமருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

பிரதமருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான கோரிக்கை எழுத்து மூலம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகத் தோற்றிய அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படும் நிலைக்கு கொண்டு வரப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிதாராச்சி குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...