follow the truth

follow the truth

May, 12, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஹேமா பிரேமதாச தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை திரும்ப அரசிடம் கையளிக்க தீர்மானம்

ஹேமா பிரேமதாச தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை திரும்ப அரசிடம் கையளிக்க தீர்மானம்

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாச அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Talk with Sudaththa யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“..என் அம்மா இப்போது உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்துவதில்லை. நான் சொல்லியல்ல அவராகவே அந்த இல்லத்தை ஒப்படைக்கப் போகிறார்.. அவர் ஒரு நாளும் அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ்ந்ததில்லை.

எனது அம்மா இப்போது ஒரு தனியார் வீட்டில் வசிக்கிறார். என் தாய் என் தந்தையின் ஓய்வூதியத்தைப் பெறுகிறார், நான் அதை நியாயப்படுத்துகிறேன் என்று சொல்ல விரும்புகிறேன். எனக்கு அதில் தவறேதும் தெரியவில்லை.

என் தாய்க்கு பாதுகாப்பு கிடைக்கிறது. என் அம்மா இப்போது வயதானவர். அந்தச் சலுகைகளை அவர் தவறாகப் பயன்படுத்தி அரசியல் வேலை செய்வதாக நான் நினைக்கவில்லை. அப்பாவின் அர்ப்பணிப்பு என் அம்மாவுக்கு சலுகைகளை அனுபவிப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. அவரது சொந்த கருத்துப்படி, உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட உள்ளது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...