follow the truth

follow the truth

May, 12, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசஜித் தான் அடுத்த ஜனாதிபதி என்று நாடு முழுவதும் பேசப்படுகிறது..

சஜித் தான் அடுத்த ஜனாதிபதி என்று நாடு முழுவதும் பேசப்படுகிறது..

Published on

சஜித் பிரேமதாசவுக்கு அடுத்த மக்கள் ஆணை கிடைக்கும் என நாடளாவிய ரீதியில் மக்கள் பேசிக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.

நாட்டின் மக்கள் ஆணை தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியினர் அரசாங்கத்திற்கு செல்வார்கள் என அரசாங்கம் மேற்கொள்ளும் பொய்யான ஊடகப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி மக்களை கேட்டுக்கொள்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அசல் உறுப்பினர்கள் எவரும் ஒருபோதும் அரசாங்கத்தில் இணையமாட்டார்கள் என அவர் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் தெரிவித்தார்.

ஹலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...