follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுகஞ்சன விஜேசேகரவிடம் CID வாக்குமூலம் பதிவு

கஞ்சன விஜேசேகரவிடம் CID வாக்குமூலம் பதிவு

Published on

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட நாளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பாராளுமன்றத்தில் வைத்து அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக சம்பவத்தின் சாட்சியாளர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

எரிபொருள் பௌசர்கள் புறப்படுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்காமை, விமான நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு தடை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு 03 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதாக தெரிவித்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் கடந்த நாட்களில் பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததுடன், சுமார் 20 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...