follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுகஞ்சன விஜேசேகரவிடம் CID வாக்குமூலம் பதிவு

கஞ்சன விஜேசேகரவிடம் CID வாக்குமூலம் பதிவு

Published on

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட நாளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பாராளுமன்றத்தில் வைத்து அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக சம்பவத்தின் சாட்சியாளர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

எரிபொருள் பௌசர்கள் புறப்படுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்காமை, விமான நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு தடை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதனூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு 03 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதாக தெரிவித்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் கடந்த நாட்களில் பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததுடன், சுமார் 20 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...