follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1'நான் அமைச்சர் பதவிக்கு பிச்சை எடுக்கவில்லை' - ராஜிதவுக்கு கெஹலிய பதிலடி

‘நான் அமைச்சர் பதவிக்கு பிச்சை எடுக்கவில்லை’ – ராஜிதவுக்கு கெஹலிய பதிலடி

Published on

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என அண்மையில் அறிவித்திருந்தார்.

தற்போது சுகாதார சேவை நிலைமை மிகவும் சோகமாக இருப்பதாகவும் அப்போது பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கைக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) கண்டியில் பதிலளிக்கையில்;

“.. இலங்கையின் மிகவும் பாரதூரமான சவாலான காலத்தில் தான் நான் அமைச்சரானேன். நாளைய தினம் பற்றிய நம்பிக்கை இல்லாத நேரம், ஆர்ப்பாட்டங்கள் சாந்தி சந்தியாக இருக்கும் நேரத்தில், 69 இலட்சம் வாக்குகளை பெற்ற நிறைவேற்று ஜனாதிபதி, ஆர்ப்பாட்டத்தின் விளைவினால் மிகவும் கொடூரமான முறையில் அனைவரையும் பதவி விலகும் ஒரு சூழலில் தான் நான் சுகாதார அமைச்சராக பதவியேற்றேன். அதிகமானோருக்கு கற்பனை கதைகளை கூற முடியும், அன்று யாருமே முன்வரவில்லையே.. இருந்தவர்களும் பின்கதவினால் ஓடினார்கள்.

சுகாதார துறை என்பது ஏனைய துறைகளை விட சற்று அல்ல நிறையவே மாறுபட்டதொன்று. ஏனென்றால், வெங்காயம், மிளகாய், பருப்பு போன்று விலைகளை கூட்டவும் குறைக்கவும் மருந்து வகைகளுக்கு முடியாது. அதற்கென ஒரு முறைமை உள்ளது. 85% மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது வெளிநாடுகளில் இருந்து. அப்போது எமது கையிருப்பு டொலர் மில்லியன் கூட இருக்கவில்லை. கையிருப்பு வீழ்ச்சியடைந்திருந்த அந்தத் தருணத்தில் மருந்துகள் 85% ஆனவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவது இலேசான காரியமல்ல. அதற்கு பட்ட பாட்டினை அமைச்சர் என்ற முறையிலும் அமைச்சின் செயலாளர் என்ற முறையிலும் நாம் வார்த்தையில் கூற முடியாது. அதை விட்டு கற்பனைக் கதைகளை கூறுவோருக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

நான் அரசியலில் 30 வருட காலமாக உள்ளேன், 21 வருட அமைச்சரவை அமைச்சராக இருந்துள்ளேன். இத்தனை வருடத்திலும் நான் அமைச்சு வேண்டும் என்று பிச்சை எடுக்கவில்லை. நான் ராஜித அவர்களை பற்றியல்ல என்னைப் பற்றிக் கூறுகிறேன். அதனை தப்பாக திரிவுபடுத்திக் கூற வேண்டாம். நான் இதுவரைக்கும் அமைச்சுப் பதவி கோரி பிச்சை எடுத்ததில்லை..”

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...