follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1சமுர்த்தி வங்கி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக 805 மில்லியன் செலவிட திட்டம்

சமுர்த்தி வங்கி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக 805 மில்லியன் செலவிட திட்டம்

Published on

தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நாடளாவிய ரீதியில் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி நிதியத்தில் இருந்து 805 இலட்சம் ரூபாவை மிகவும் சிரமமான நேரத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு செலவிடுவதை விட்டு இந்தத் தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக அவர் கூறுகிறார்.

அத்துடன், பதவி உயர்வு பெற்று ஏறக்குறைய 28 வருடங்களாக பணிபுரியும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஊழியர் உரிமைகளை அரசாங்கம் தவிர்த்து வருவதாக தேசிய அமைப்பாளர் கூறுகிறார்.

இந்த உண்மைகளின் அடிப்படையில் பிரச்சினைகளை தீர்க்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி சமுர்த்தி வங்கிகள் ஏப்ரல் 15 ஆம் திகதி மூடப்பட்டு ‘சுப நேர’ பரிவர்த்தனைகளில் இருந்து விலகுவதாக அவர் மேலும் கூறுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...