follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1சமுர்த்தி வங்கி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக 805 மில்லியன் செலவிட திட்டம்

சமுர்த்தி வங்கி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக 805 மில்லியன் செலவிட திட்டம்

Published on

தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நாடளாவிய ரீதியில் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி நிதியத்தில் இருந்து 805 இலட்சம் ரூபாவை மிகவும் சிரமமான நேரத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு செலவிடுவதை விட்டு இந்தத் தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக அவர் கூறுகிறார்.

அத்துடன், பதவி உயர்வு பெற்று ஏறக்குறைய 28 வருடங்களாக பணிபுரியும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஊழியர் உரிமைகளை அரசாங்கம் தவிர்த்து வருவதாக தேசிய அமைப்பாளர் கூறுகிறார்.

இந்த உண்மைகளின் அடிப்படையில் பிரச்சினைகளை தீர்க்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி சமுர்த்தி வங்கிகள் ஏப்ரல் 15 ஆம் திகதி மூடப்பட்டு ‘சுப நேர’ பரிவர்த்தனைகளில் இருந்து விலகுவதாக அவர் மேலும் கூறுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...