follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1நிதி இராஜாங்க அமைச்சர் சிறப்பு கூட்டத்திற்காக வாஷிங்டனுக்கு

நிதி இராஜாங்க அமைச்சர் சிறப்பு கூட்டத்திற்காக வாஷிங்டனுக்கு

Published on

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச பங்காளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை நம்புவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாளை (10) வாஷிங்டனில் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான விசேட சந்திப்பில் அதற்கான சிறந்த சந்தர்ப்பம் அமையும் என இராஜாங்க அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நாளை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இணைய உள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் அது தொடர்பான பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...