follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபண்டி உரம் விலை குறைந்தது

பண்டி உரம் விலை குறைந்தது

Published on

இந்த வருடம் நெற்செய்கைக்கான பண்டி உரத்தின் விலையை 4,500 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

50 கிலோ பண்டி உரம் ஒரு மூட்டை 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், அந்தத் தொகையை விவசாயிகள் தாங்கிக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உரங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் உர நிறுவனங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதால், இந்தப் போட்டியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...