follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1முட்டைக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்தாகும் சாத்தியம்

முட்டைக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்தாகும் சாத்தியம்

Published on

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் ஒரு கிலோ வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒரு கிலோவிற்கு அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த விலைகளின்படி முட்டை ஒன்றின் விலை 50 ரூபாய்க்கு மேல் உள்ளது.

எனினும், முன்னதாக முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடர்புடைய இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் ஒரு முட்டைக்கு இரண்டு அதிகபட்ச விலை வரம்புகளை நிர்ணயித்துள்ளன.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் அநியாயமான இலாபம் ஈட்டுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எடைக்கு ஏற்ப முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...