follow the truth

follow the truth

May, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமெனிங் வணிக வளாகத்தில் கடை வழங்குவதாக கூறி முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரூ.650 மில்லியன் மோசடி

மெனிங் வணிக வளாகத்தில் கடை வழங்குவதாக கூறி முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரூ.650 மில்லியன் மோசடி

Published on

பேலியகொட மெனிங் வணிக வளாகத்தில் கடை அறைகளை வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பல்வேறு நபர்களிடம் இருந்து 650 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

10 கடை அறைகள் தருவதாக கூறி தொழிலதிபர் ஒருவரிடம் மட்டும் குறித்த இராஜாங்க அமைச்சர் பெருமளவு பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், உரிய பணம் வழங்கப்பட்ட பலருக்கு அந்த வணிக வளாகத்தில் கடைகள் வழங்கப்படவில்லை. பேலியகொட மெனிங் வணிக வளாகம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது.

இதன்படி, பலர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தெனுக விதானகமகேவை சந்தித்து இது தொடர்பான தமது முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இராஜாங்க அமைச்சர் தெனுக விதானகமகே முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...