follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை "மொகா" புயலாக மாறுகிறது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை “மொகா” புயலாக மாறுகிறது

Published on

திருகோணமலையில் இருந்து 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள கடற்பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை “மொகா” (Mocha) புயலாக உருவாகி இன்று (12) மாலை மிகவும் தீவிரமான சூறாவளியாக உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு நாளை (14) பிற்பகலில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மார் கரையோரத்தை கடக்கப் போகிறது என்றும் குறித்த திணைக்களம் கூறுகிறது.

எவ்வாறாயினும், இலங்கையில் இந்த அமைப்பின் ஊடாக காற்று நீரோட்டங்கள் கடந்து செல்வதால், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் சில இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாத்தறை மாவட்டங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் நாகொட, யக்கலமுல்ல, பத்தேகம, எல்பிட்டிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் தெரணியகல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் மண்சரிவு அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...