follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதூர சேவைப் பஸ்களுக்கு நிலையான பஸ் நிறுத்தம்

தூர சேவைப் பஸ்களுக்கு நிலையான பஸ் நிறுத்தம்

Published on

மாகாணங்களுக்கிடையிலான பஸ்களுக்கு நிலையான நிறுத்தங்களின் முன்னோடித் திட்டம் இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து காலி வரையிலான வீதியில் இத்திட்டம் முதலில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பயணிகளை பேருந்தில் ஏற்றுவது தொடர்பில் நீண்ட தூர சேவைப் பேருந்துகளுக்கும் குறுகிய தூரப் பேருந்துகளுக்கும் இடையில் நிலவும் மோதல்களுக்குத் தீர்வாக இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் நம்புகிறார்.

2019 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட புதிய சமிக்ஞையுடன் கூடிய பலகைகள் தற்போது நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து நிலையங்களாக கொழும்பில் இருந்து கிந்தோட்டை வரை 37 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் புதிய சாலைப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...