follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து தனுஷ்க விடுவிப்பு

மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து தனுஷ்க விடுவிப்பு

Published on

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் உட்பட தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 4 குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுகள் நீக்கப்படுவதாக அரசாங்க சட்டத்தரணி டவுனிங் சென்டர் நீதிமன்றில் இன்று (18) அறிவித்தார்.

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகளில் ஒன்றை முன்வைத்து எஞ்சிய மூன்று குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்படும் என இன்று (18) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசாங்க சட்டத்தரணி ஹ்யூ படின் டவுனிங் சென்டர் நீதவானிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் கிளாரி ஃபர்னான், மூன்று குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதன்படி, தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அரசாங்க சட்டத்தரணி சுமத்த தீர்மானித்த குற்றச்சாட்டானது பெண்ணின் அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூலை 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...