follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கும் மோசடியில் 09 தரகர்கள் கைது

கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கும் மோசடியில் 09 தரகர்கள் கைது

Published on

குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்கும் 09 தரகர்கள் இன்று காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பரிசீலிப்பதற்காக 25,000 ரூபா பணம் அறவீடு செய்து வரிசையில் நிற்காமல் முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக இந்தக் கடவுச்சீட்டுகள் பெற்றுக் கொள்ளும் நடைமுறை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், அதனை உடனடியாக மேற்கொள்ளுமாறும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி இன்று காலை இவர்களிடம் பணம் பெற்ற 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கைகள் தொடரும் என்றும், மோசடியாளர்களுடன் இணைந்து செயல்படும் அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...