follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1புதிய அபிவிருத்தி திட்டங்கள், திட்டங்களை மதிப்பீடு செய்ய தேசிய அபிவிருத்திக் குழு

புதிய அபிவிருத்தி திட்டங்கள், திட்டங்களை மதிப்பீடு செய்ய தேசிய அபிவிருத்திக் குழு

Published on

புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தேசிய அபிவிருத்தி குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முறையான அடையாளம் மற்றும் முறையான மதிப்பீடுகள் இன்றி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமையினால் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில திட்டங்கள் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாத காரணத்தினால் இந்தக் குழு நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்வனவுக் குழுக்களினால் பரிசீலிக்கப்படும் மதிப்பிடப்பட்ட அல்லது அதிக மதிப்பீட்டுச் செலவைக் கொண்ட திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்பிப்பதற்காக முன்னாள் திறைசேரி செயலாளர் தயா லியனகே தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...