follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1'ஸ்மார்ட்' வெளிநாட்டு வேலை மோசடி செய்பவர்களிடம் சிக்க வேண்டாம்

‘ஸ்மார்ட்’ வெளிநாட்டு வேலை மோசடி செய்பவர்களிடம் சிக்க வேண்டாம்

Published on

வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று கூறி பணம் பெறுவது தற்போது புத்திசாலித்தனமான திருட்டுத்தனமாக மாறியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது கொரியா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்படும் மோசடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்று சிரமத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சமூகம் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் தெரிந்தோ தெரியாமலோ வெளிநாட்டு வேலைவாய்ப்புப் போக்குவரத்தில் மக்கள் சிக்கிக் கொள்கின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.

“வேலையை எதிர்பார்த்து தவறான வழியில் வெளியூர்களுக்குச் சென்றவர்கள், பிரச்சினையில் சிக்கிய பின் தூதரகங்கள் முன் வந்து விமர்சிகிறார்கள். வேணாம் என்று எவ்வளவு சொன்னாலும் சுற்றுலா விசா எடுத்து வேலைக்குச் செல்கிறார்கள். போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு அரசுப் பணத்தில் மீண்டும் நாடு திரும்புகின்றனர்..” என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று (10) மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே...

இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11)...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

UPDATE - 09.30 ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி,...