follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1சிங்கப்பூர் தாதியர் கோட்டா மீண்டும் இலங்கைக்கு

சிங்கப்பூர் தாதியர் கோட்டா மீண்டும் இலங்கைக்கு

Published on

கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரினால் விடுக்கப்பட்ட கடிதம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை தாதியர்களுக்கான சிங்கப்பூர் வேலை கோட்டா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் குழுவாக முப்பத்தாறு தாதியர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் இயக்குநர்கள் தலைமையில் இக்குழுவினரை வரவேற்கும் நிகழ்வு றோயல் ஹோட்டலில் நடைபெற்றது.

சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தன மற்றும் தொழிலாளர் திணைக்களத்தின் ஆலோசகர் நிபுன திபதுமுனுவா ஆகியோரின் தலையீட்டினால், வேலை கோட்டா மீண்டும் சொந்தமாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இருநூறு இலங்கை தாதியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்கவுள்ளதுடன் ஏனைய குழுவினர் எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்லவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...