follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1இந்த வருடம் 24 டெங்கு மரணங்கள் பதிவு

இந்த வருடம் 24 டெங்கு மரணங்கள் பதிவு

Published on

2023 ஆம் ஆண்டு மே 28ம் திகதி வரை இலங்கையில் 38,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 24 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.

மற்ற ஆண்டுகளில், மழைக்காலங்களில் ஒரு மாதத்தில் 450-500 டெங்கு நோயாளர்கள் பதிவாகும். எவ்வாறாயினும், இவ்வருடம் இதே காலப்பகுதியில் மாதாந்தம் 1000-1500 நோயாளர்கள் பதிவாகியிருப்பது 2017 ஆம் ஆண்டு போன்று அதிக டெங்கு தொற்றுநோய்க்கு நாடு செல்வதற்கான ஆரம்ப அறிகுறியாகும் என வைத்தியர் அனோஜா தீரசிங்க எச்சரிக்கிறார்.

38,000 டெங்கு நோயாளர்களைக் கொண்ட நாடாக அடுத்த பருவ மழைக்காலத்தை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும், இது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனோஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...