follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1'சஜித், டளஸ் ஆகியோர் குறித்து கண்காணிப்புடன் இருங்கள்'

‘சஜித், டளஸ் ஆகியோர் குறித்து கண்காணிப்புடன் இருங்கள்’

Published on

ராஜபக்சவை திருடர்கள் என்று முத்திரை குத்தும் எதிர்க்கட்சியினர் ராஜபக்சவால் நியமிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வாக்களிப்பதன் மூலம் இரட்டை வேடத்தை கடைபிடிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இந்த நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி குழுக்கள் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற எதிர்க்கட்சியினரின் நடத்தையை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக சஜித் மற்றும் டளஸ் தரப்பினர் செயற்படும் விதத்தை இலங்கை மக்கள் அவதானமாக அவதானிக்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, புறக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...