follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1'புத்த மதத்தை அவமதித்த நடாஷா கைது - மதங்களுக்கு பெரும் கேடு விளைவித்த ஞானசார தேரரை...

‘புத்த மதத்தை அவமதித்த நடாஷா கைது – மதங்களுக்கு பெரும் கேடு விளைவித்த ஞானசார தேரரை என்ன செய்வது?’

Published on

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டால் முஸ்லிம்களையும் இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

‘பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டால் முஸ்லிம்களையும் இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வது?
முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் என எரித்த ஞானசாரவின் செயலை விடவா நடஷாவின் வார்த்தைகள் மோசமானது?

மேலும், டாக்டர் ஷாபியின் வாழ்க்கையை அழித்து பொய்யான குற்றச்சாட்டுகளை சூழ்ச்சியாக செய்து நாடு முழுவதும் பரப்பி ஒரு நல்ல மனிதனின் வாழ்க்கையை சீரழித்த அயோக்கியர்களை பற்றி என்ன சொல்வது ?
குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க இன்னும் நேரமுண்டு, ஜனாதிபதி விக்கிரமசிங்க அதை செய்ய வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயக ஆட்சியாக இருக்கும்!’ எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...