follow the truth

follow the truth

September, 1, 2025
Homeஉள்நாடுதுப்பாக்கி தோட்டாக்களை தயாரிக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை

துப்பாக்கி தோட்டாக்களை தயாரிக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை

Published on

இலகுரக ஆயுதங்களுக்கானதுப்பாக்கி தோட்டாக்களை தயாரிக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வேயங்கொடையில் உள்ள இராணுவத்தினரின் உற்பத்தி ஆலையில் படையினருக்கான சீருடைகள், போர் ஹெல்மெட்கள், உடல் கவசம் போன்றவற்றை உற்பத்தி செய்து வருவதுடன், இரண்டாம் கட்டமாக இந்த வெடிமருந்துகளை தயாரிக்க இராணுவம் தயாராகி வருகிறது.

இது தொடர்பில் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் வினவியபோது, ​​இலங்கை இராணுவத்தில் திறமையான அதிகாரிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இலகுரக ஆயுதங்களுக்கான வெடிமருந்து உற்பத்தியை இரண்டாம் கட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டால் பெருமளவிலான அந்நியச் செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலகுரக ஆயுதங்களில் 9MM அடங்கும். பிஸ்டோலா, டி. 56 வகை துப்பாக்கிகள் மற்றும் எல்.எம்.ஜி. துப்பாக்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இலகுரக ஆயுதங்களுக்குத் தேவையான வெடிமருந்துகள் இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...