follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பேராயர் ஜெரோமின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு

பேராயர் ஜெரோமின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு

Published on

பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (05) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, இடைக்கால மனுவொன்றை சமர்ப்பித்த போது, ​​அதற்கான காரணங்களை தெரிவிக்க அவகாசம் கோரினார்.

மனுதாரர் பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன அந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...