follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1'எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை'

‘எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை’

Published on

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான எரிபொருள் இருப்புக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் ஓர்டர்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டன என்பது தொடர்பிலும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நாளாந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு நிரப்பு நிலையங்களிலும் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...