follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மின்சார ஊழியர் சங்கத்தினால் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

மின்சார ஊழியர் சங்கத்தினால் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

Published on

மின்சார சபையை தனியார் மயமாக்கும் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மின்சார வாரியத்தை 15 நிறுவனங்களாகப் பிரிக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்கள் கடந்ததும், அக்டோபர் 1-ஆம் திகதி முதல் இந்த 15 நிறுவனங்களையும் அந்த சட்டமூலத்தின்படி தான் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளன.

இந்த சட்டத்தின் ஏற்பாடாக இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஓய்வூதியத்தை உள்ளடக்குவதில்லை என தீர்மானம் எடுத்துள்ளனர்.
நிறுவனங்களுக்கு மின் வாரியத்தை வழங்கும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இல்லையேல் 21ம் திகதி மின்சார வாரியத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மின்வாரிய அலுவலகத்தை விட்டு அனைவரும் வெளியேறி விகாரமஹாதேவி பூங்காவில் ஒன்று கூடுவோம். இது அரசாங்கத்திற்கும் எளிதாகும். ”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...