follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1யாழ்ப்பாணத்தில் மாலை வகுப்புகள் தொடர்பில் தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் மாலை வகுப்புகள் தொடர்பில் தீர்மானம்

Published on

யாழ்.மாவட்டத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக மாலை வகுப்புகளை இடைநிறுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட அபிவிருத்திக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் உரிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி வகுப்புகளும் யாழ்.மாவட்ட செயலகத்திலும் வடமாகாண கல்வி அமைச்சிலும் பதிவு செய்யப்பட உள்ளன.

மேலதிக பயிற்சி வகுப்புகள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மேலதிக பயிற்சி வகுப்பு மேலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் மனநலம் கருதி உரிய முடிவு எடுக்கப்பட உள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மேலதிக பயிற்சி வகுப்பு மேலாளர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...